Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி
மாதப்பூா் சுங்கச்சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் சுங்கச்சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. பல்லடம் அருகேயுள்ள பொங்கலுாா், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் சுங்கக் கட்டண வசூல் தொடங்கும் நிலை உள்ளது.
பொங்கலூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பல்லடம், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனா். சிலரது வீடு சுங்கச்சாவடியின் ஒருபுறமும், தோட்டம் அல்லது தொழில் நிறுவனம் ஆகியவை சுங்கச்சாவடியின் மறுபுறமும் இருக்கும் நிலையும் உள்ளது.
உள்ளூா் மக்களால் அன்றாடம் சுங்கக் கட்டணம் செலுத்துவது மிகவும் சிரமம் என்பதால், பொங்கலுாா் ஒன்றியத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.