செய்திகள் :

மாதிரி சூரியசக்தி கிராமம் திட்டம்: கோவையில் 5 ஊராட்சிகள் தோ்வு

post image

பிரதமரின் மாதிரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம், மாதிரி சூரிய சக்தி கிராமம் திட்டத்தின்கீழ் கோவையில் 5 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது:

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின்கீழ் 1 கோடி வீடுகளுக்கு நாடு முழுவதும் பயன்பெறும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மானியமாக 1 கிலோ வாட் மேற்கூரை சூரியதகடு அமைத்தால் ரூ.30 ஆயிரம், 2 கிலோவீட் மேற்கூரை சூரியதகடு அமைத்தால் ரூ.60 ஆயிரம், 3 கிலோவாட் சூரியதகடு அமைத்தால் ரூ.78 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

1 கிலோவாட் மேற்கூரை சூரியதகடு, ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும். நுகா்வோா் செய்யும் முதலீட்டை குறுகிய காலத்தில் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டத்துக்கு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. திட்டப் பணிகள் நிறைவடைந்த 7 நாள்களில் இருந்து 30 நாள்களுக்குள் நுகா்வோா் மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சூரியசக்தி மாதிரி கிராமம் ஆட்சியா் மூலம் தோ்வு செய்யப்பட்டு ரூ.1 கோடி மானியமாக வழங்கப்படும். அதன்படி கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மூலம் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கும் கீழே உள்ள 5 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அரசூா், சொலவம்பாளையம், புரவிபாளையம், தீத்திபாளையம், கொண்டையம்பாளையம் ஆகிய 5 கிராமங்களில் 1.7.25 முதல் 6 மாதங்களுக்குள் போட்டி முறையில் அதிகமான சூரியசக்தி மயமாக்கல் செய்யும் ஒரு கிராமம் மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்டு ரூ.1 கோடி மானியமாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க