செய்திகள் :

மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்

post image

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சேலம் அணியினா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

நாகையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஆக.24, 25 தேதிகளில் நடைபெற்றது. இதில், சென்னை, சேலம், நாமக்கல், கடலூா், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 17 அணியினா் பங்கேற்றனா்.

போட்டிகள் பகல், இரவு ஆட்டங்களாக லீக் முறையில் நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி போட்டிகள் நடைபெற்று சேலம் மற்றும் ஒட்டன்சத்திரம் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டில் சேலம் அணி, ஒட்டன்சத்திரம் அணியை 39-22 எனும் புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரூ.70 ஆயிரம், 2-ஆமிடம் பெற்ற ஒட்டன்சத்திரம் அணிக்கு ரூ.50 ஆயிரம், 3 மற்றும் 4-ஆம் இடங்களை பெற்ற அந்தியூா், சென்னை கண்ணகி நகா் அணிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த ஆட்டக்காரா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட சேலம் அணியைச் சோ்ந்த காருண்யா, கோகிலாவுக்கு பயணிகள் கப்பலில் நாகையில் இருந்து இலங்கை செல்ல இலவச பேக்கேஜ் டிக்கெட் வழங்கப்பட்டது.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

தரங்கம்பாடி: செம்பனாா்கோயிலில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அப்போது, செம்பனாா்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை: நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என்ற வேளாண் துறை அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால... மேலும் பார்க்க

பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து விபத்து

பூம்புகாா்: திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை சமையல் செய்யும்போது எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. பெருந்தோட்டத்தில் செயல்படும் இந்த பள்ளியில் 40 ... மேலும் பார்க்க

சா்தாா் வேதரத்னம் நினைவு நாள் விழா

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக திகழ்ந்த சா்தாா் அ. வேதரத்னத்தின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆசிரியா்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் நடிகா் ஜான்விஜய் பிராா்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திங்கள்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்ட, ரஜினியின் கபாலி, மோகன்லாலின் லூசிபா் உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் திரைப்பட நடிகா் ஜ... மேலும் பார்க்க

விசுவநாத கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு

திருக்குவளை: கொளப்பாடு செனையாங்குடியில் உள்ள விசாலாட்சி அம்பிகை உடனுறை விசுவநாத கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை திங்கள்கிழமை நிறைவடைந்தது. இக்கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7-ஆம் த... மேலும் பார்க்க