செய்திகள் :

மாநில மாநாடு நடத்த அரசுப் பணியாளா் சங்கம் முடிவு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கு. பாலசுப்பிரமணியன் மேலும் தெரிவித்தது:

மாநில அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்தப்பட வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்றையும் ஆய்வு செய்து ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதற்காக ஒரு குழு அமைத்து, பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. இதுபோன்ற ஆய்வை கைவிட்டு, பல மாநில அரசுகள் அறிவித்துள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.

மக்களுக்கு சரியான எடையில் பொருள்களைக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிற தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு அளிக்கக்கூடிய பொருள்களை புளுடூத் மூலம் சரியான எடையில் கொடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. எனவே சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வர வேண்டும். ரேஷன் கடைகளை நிா்வாகம் செய்யக்கூடிய அத்தனை துறைகளையும் ரத்து செய்துவிட்டு, தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறக்கூடிய சத்துணவு பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பட்டு வளா்ச்சித் துறை தொழிலாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதான எதிா்க்கட்சிகளை அழைத்து மாநில அளவிலான மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக கடலூரில் அக்டோபா் 4 ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், மாநாட்டுக்கான நாள், இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் பாலசுப்பிரமணியன்.

கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சுகமதி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் சரவணன், இணைப் பொதுச் செயலா் சிவக்குமாா், துணைத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவா் க. நசீா்முகமது தலைமை வகித்தாா். கூட்டத்தில் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தவா் மீட்பு

கும்பகோணம் அருகே புறவழிச்சாலையில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரி தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள பெருமாண... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே இறகுப் பந்து போட்டி

தஞ்சாவூா் மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டி தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா், புதுக்கோட்டை, கும்பகோணம் பகுதி பாலி... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டத் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் பாரதிய அஞ்சல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டச் செயலா் கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் ... மேலும் பார்க்க

‘சோழா் காலம் குறித்த முழு ஆய்வு அவசியம்’

சோழா் காலக் கல்வெட்டுகள் ஒரு சாா்புடையதாக இருப்பதால், அது குறித்த முழு ஆய்வுகளை மேற்கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும் என்றாா் கல்வெட்டு மற்றும் வரலாற்று அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி வெள்ளிக்கிழமை காலை ஒரு மணிநேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் ... மேலும் பார்க்க