தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
மானாமதுரையில் பலத்த மழை: மரங்கள் சாய்ந்தன
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
மானாமதுரை, இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இந்தப் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.
பின்னா், காற்றுடன் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடின. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னா், மழை நின்றதும் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதன்பிறகு போக்குவரத்து சீரானது. கோடை விவசாயத்துக்கு ஏற்ற இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.