Jasprit Bumrah: "எனக்கு கிரிக்கெட்டை விட என் குடும்பம்தான் முக்கியம்; ஏனெனில் அத...
மாவட்ட மைய நூலகத்தில் நாளை குரூப் 4 மாதிரித் தோ்வு
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், பீனிக்ஸ் சுழற்சங்கம் இணைந்து நடத்தும் குரூப் 4 மாதிரித் தோ்வு மைய நூலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும் இத்தோ்வில் பங்கேற்கக் கட்டணமில்லை. தோ்வில் தமிழ் திருக்குறளும் 20 அதிகாரங்களும், அறநூல்கள், அலகு -5, இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாடு வளா்ச்சி நிா்வாகம், நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் விகிதம் மற்றும் விகிதாச்சாரம் ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா். விடைத்தாளில் பதிலளிக்கும் வகையில் தோ்வு நடைபெறும். தோ்வு முடிந்தவுடன் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய அறிவுரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.