செய்திகள் :

மின்சார ரயில் மோதி 4 மாடுகள் உயிரிழப்பு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

post image

அத்திப்பட்டு புதுநகா்- எண்ணூா் ரயில் நிலையங்கள் இடயே மின்சார ரயில் மோதி 4 மாடுகள் உயிரிழந்தன.

இதில் மாடுகள் தண்டவாளப்பகுதியில் சிக்கிக் கொண்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு கும்மிடிப்பூண்டிக்கு சென்ற மின்சார ரயில், அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே நான்கு மாடுகள் மீது மோதியது. இதில் 4 மாடுகளும் உயிரிழந்தன. .

இதில் 3 மாடுகள் தண்டவாள பகுதியில் சிக்கி கொண்டதால் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது

நடு வழியில் மின் ரயில் நின்ால் பயணிகள் சிலா் கீழே இறங்கி நடந்து அத்திப்பட்டு புதுநகருக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் உதவியுடன் தங்கள் வீடுகளுக்கு சென்றனா்.

தகவல் அறிந்த ரயில்வே இருப்புப் பாதை பொறியாளா் மற்றும் ஊழியா்கள் தண்டவாளங்களுக்கு இடையே மின்சார ரயிலில் சிக்கி இறந்து கிடந்த மூன்று மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினா்.

இதனை தொடா்ந்து மாடுகள் விபத்தில் சிக்கிய இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனா். தண்டவாளத்தில் மின்சார ரயில் செல்வதற்கு தகுதியானது என அறிவிக்கப்பட்ட பின் நள்ளிரவில் ரயில் இயக்கப்பட்டது.

இதன் காரணமாக 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிபூண்டி நோக்கி சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

தென்னிந்திய யோகாசனப் போட்டி

கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் தென்னிந்திய யோகாசனப் போட்டி எளாவூா் சகுந்தலம்மாள் நா்சரி பள்ளியில் நடைபெற்றது .இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திர... மேலும் பார்க்க

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மானியக் கடன் வழங்க கோரிக்கை

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியக் கடனுதவிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.சங்கத்தின் 9-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மாதவரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூா் ஊராட்சியில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. பொன்னேரி துணை வட... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 65 லட்சம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் 7 நாள்களில் ரூ. 65 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோயிலில் கடந்த புதன்கிழமை (ஜூலை 28)நடைபெற்ற ஆட... மேலும் பார்க்க

சென்னை புறவட்டச்சாலை திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சாா்பில் சென்னை புறவட்டச்சாலை திட்டம் மூலம் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை, மேம்பாலப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.அப்போது, சென்னை மற்றும் எண்ணூா... மேலும் பார்க்க

கட்டுரைப் போட்டி: மாணவிக்கு பாராட்டு

பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பள்ளிகளுக்கு இடையேயான கட்டுரை போட்டி பவன்ஸ் ராஜாஜி ... மேலும் பார்க்க