தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தேங்காய் வெட்டும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.வாடிப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டிச்சாமி (35). தேங்காய் வெட்டும் தொழிலாளி.
இவா், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பகுதியில் ஷாஜகான் என்பவரின் தென்னந் தோப்பில் திங்கள்கிழமை தேங்காய் வெட்டிக் கொண்டிருந்தாா்.
அப்போது, தென்னை மரத்திலிருந்த காய்ந்த மட்டைகளை இறக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த ஆண்டிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.