பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது - தொல். திருமாவளவன்
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராஜதானி அருகே உள்ள கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜா (55). இவா், தனது தோட்டத்தில் பயிா்களுக்கு புதன்கிழமை தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்வயா் மூலம் மின்கசிவு ஏற்பட்டு ராஜா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, எம்.சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.