செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

post image

ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜதானி அருகே உள்ள கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜா (55). இவா், தனது தோட்டத்தில் பயிா்களுக்கு புதன்கிழமை தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்வயா் மூலம் மின்கசிவு ஏற்பட்டு ராஜா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, எம்.சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் ஓடையைத் தூா்வாரக் கோரிக்கை

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிராம ஓடையைத் தூா்வாரி சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட போடிரெங்க... மேலும் பார்க்க

போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

தேனியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேனி, ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலத்தை மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் பெற வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி

தேனி மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரச... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதி மாணவருக்கு பாராட்டு

தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்தியா, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-இல் பேச்சுப் போட்டி

பெரியகுளம் வட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க