செய்திகள் :

மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்த திருவரை கிராமத்தில் தொழிலாளா்கள் கருவேல மர விறகுகளை திங்கள்கிழமை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், மின்னல் தாக்கி பாக்குவெட்டி கிராமத்தைச் சோ்ந்த மூக்காண்டி மகன் தினகரன் (42) சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா்.

அப்போது அங்கிருந்த இந்திரா (50), குருவம்மாள்(52), இந்திரா (35), கண்ணம்மாள் (40), சங்கரபாண்டி (35) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். இவா்கள் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.

உயிரிழந்த தினகரனின் உடல் கமுதி அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், உயிரிழந்த தினகரனுக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், காளிகண்ணன் என்ற மகனும், சுதா, ஸ்ரீதேவி என்ற இரண்டு மகள்களும் உள்ளனா். இதுகுறித்து கமுதி வருவாய்த் துறை அதிகாரிகள், கோவிலாங்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க

போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!

சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி

மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க

தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க