செய்திகள் :

மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம்

post image

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கருப்பசாமியின் மகள் முத்து கௌசல்யா (17). விளாத்திகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்த அவா், அரசுத் தோ்வு எழுதியிருந்தாா். கடந்த ஏப். 21ஆம் தேதி பலத்த மழை பெய்தபோது, அவா் வீட்டருகே காயவைத்த மிளகாயை எடுக்கச் சென்றாராம். அப்போது, மின்னல் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சாா்பில் இயற்கை பேரிடா் மேலாண்மை நிவாரண நிதி ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் ராணி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க