செய்திகள் :

மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு!

post image

மியான்மர் சைபர் குற்ற முகாமில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் சைபர் குற்ற முகாம்களில் வலுகட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் 13 பேர் கொண்ட குழுவினர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 11 இளைஞர்களும் 2 இளம் பெண்களும் அடங்குவர். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாய்லாந்து எல்லையில் இருந்து பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அழைத்து வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அவர்கள் இலங்கை திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காதலர் தினத்தில் நிமிடத்துக்கு 581 சாக்லெட், 607 கேக் விற்பனை!

இதனிடையே, மியான்மரில் தனித்தனி சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன மற்ற 4 இலங்கையர்களை மீட்கும் முயற்சியில் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், அண்மையில் நடைபெற்ற தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் மியான்மர் துணைப் பிரதமர் உடனான பேச்சுவார்த்தையில், இலங்கையர்களை மீட்பதற்கான உதவியினை கோரியிருந்தார்.

இதன் விளைவாக மியான்மரில் இருந்து 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிலிப்பின்ஸ்: கொசுவைக் கொன்றால் சன்மானம்!

பிலிப்பின்ஸின் தலைநகா்ப் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் கொசுக்களை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிா... மேலும் பார்க்க

சிங்கப்பூா்: மலேசிய தமிழருக்கு இன்று தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு வியாழக்கிழமை (பிப். 20) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான பன்னீா் செல்வம் 52 கிரா... மேலும் பார்க்க

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போப் பிரான்சிஸ் முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தால... மேலும் பார்க்க