மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம்: மீன் வளா்ப்போருக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மீன் வளா்ப்பு விவசாயிகள், மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் மீன்வளா்ப்புத் தொழில் செய்துவரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவுசெய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து மீன் உற்பத்திப் பணிகளை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்று மீன்வளா்ப்புத் தொழில் செய்துவரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10,000 மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 5,000 மானியமாக வழங்கப்படவுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள மீன்வளா்ப்பு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கான உள்ளீட்டு மானியத்தைப் பெற்றுப் பயனடையலாம்.
இத்திட்டம் குறித்த இதர சந்தேகங்களுக்கும், விண்ணப்பங்கள் பெறவும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், கொளத்துாா் சாலை, பூங்கா அருகில், மேட்டூா் அணை, சேலம் மாவட்டம் - 636401 அலுவலகத்தை வேலை நாள்களில் நேரில் அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.