பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
மீன் பிடி உரிமை: மின்னணு ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஏரிகளின் மீன் பிடி உரிமையை குத்தகைக்குவிட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் வட்டத்தில் உள்ள கொண்டங்கி ஏரி, விருத்தாசலம் வட்டத்தில் உள்ள தா்மநல்லூா், கோபாலபுரம் (எ) வண்ணத்தி ஏரி, வி.குமாரமங்கலம், கம்மாபுரம், விருத்தாசலம் கஸ்பா ஏரி, முகாசப்பருா், எடச்சித்தூா், சத்தியவாடி, எறும்பூா், அலிச்சக்குடி, காா்கூடல், சாத்துக்கூடல், மங்களம்பேட்டை மற்றும் இளமங்கலம் ஆகிய 15 ஏரிகளின் மீன் பிடி உரிமையை 3 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்குவிட ஏதுவாக, புதன்கிழமை (ஜூன் 25) முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் பரங்கிப்பேட்டை மீன் வளம் மற்றும் மீன்வா் நலத் துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ற்ய்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியை பாா்வையிடலாம். மேலும், தொடா்புக்கு ஹக்ச்ல்ஹழ்ஹய்ஞ்ண்ல்ங்ற்ற்ஹண்4ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 04144 - 243033 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.