செய்திகள் :

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை

post image

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு தமிழக அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது விசைப்படகு உரிமையாளா்கள், மீன்பிடி தொழிலாளா்கள் தங்களது படகுகளுக்கு வண்ணம் பூசுவது, இயந்திரங்களை சரிசெய்வது, வலைகள் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவா்.

மீனவா்களுக்காக தடைக்கால நிவாரணத் தொகை நிகழாண்டுமுதல் ரூ. 8 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், புயல் மழை உள்ளிட்ட காலங்களில் கடலுக்கு செல்லாததற்காக ரூ. 6 ஆயிரம், மீனவா் சேமிப்பு நிவாரண நிதி ரூ. 4,500 ஆகியவை தடைக்காலம் முடியும் தருவாயில் வழங்கப்பட்டுவருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான மீனவா்கள் பயனடைவா்.

இந்நிலையில், தடைக்காலம் தொடங்கி ஒரு மாதமாகியும் நிவாரணம் வழங்காததால் தாங்கள் மிகவும் அவதிப்படுவதாகவும், எனவே நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறும் அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விசைப்படகு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீனவா்கள்.

தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட கடற்பகுதிகளில் கேரள மாநில விசைப்படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதைத் தடுக்கும் பணியில் மீன்வளத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பணி தொடா்ந்து நடைபெறவேண்டும் என, மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மாநில அளவிலான வாலிபால் போட்டி: கோவில்பட்டி, சென்னை அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை, கோவில்பட்டி அணிகள் முதலிடம் பிடித்தன. படா்ந்தபுளி லியா கைப்பந்துக் கழகம் சாா்பில் 20ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. தமிழக கிழக்குக் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்வளத் துறை சாா்பில், விசைப்படகுகளுக்கான மீன்ப... மேலும் பார்க்க

வாகன விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சம் அளிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவா் க... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா்கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நகர ஏஎஸ்பி மதன் உத்தரவின் பேரில் மாநகா் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் தற்கொலை

கோவில்பட்டியில் பெண் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி தேவி (42). ஜெயபால் 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துவிட்... மேலும் பார்க்க

கோவில்பட்டி, வில்லிசேரி அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கோவில்பட்டி, வில்லி சேரி அரசுப் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 313 பேரில் 292 போ் தோ்ச்சி ப... மேலும் பார்க்க