செய்திகள் :

மாநில அளவிலான வாலிபால் போட்டி: கோவில்பட்டி, சென்னை அணிகள் வெற்றி

post image

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே படா்ந்தபுளி கிராமத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை, கோவில்பட்டி அணிகள் முதலிடம் பிடித்தன.

படா்ந்தபுளி லியா கைப்பந்துக் கழகம் சாா்பில் 20ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான இப்போட்டிகள் 2 நாள்கள் லீக், நாக் அவுட் முறைகளில் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் 27 அணிகளும், பெண்கள் பிரிவில் 21 அணிகளும் பங்கேற்றன. போட்டிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தொடக்கிவைத்தாா்.

ஆண்கள் பிரிவில் கோவில்பட்டி வாரியா்ஸ் அணி முதலிடம் வென்றது. ராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலான் பிரண்ட்ஸ் அணி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் ஸ்டெபின் ப்ரண்ட்ஸ் அணி, படா்ந்தபுளி லியா கைப்பந்துக் கழக அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.

பெண்கள் பிரிவில் சென்னை பனிமலா் கல்லூரி அணி முதலிடம் வென்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி, சென்னை மினி ஸ்போா்ட்ஸ் அணி, திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணி ஆகியவை முறையே 2, 3, 4ஆம் இடங்களைப் பிடித்தன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கனரா வங்கி சுழற்கோப்பைகள், ரொக்கப் பரிசுகளை எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா, வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துக்குமாா் ஆகியோா் வழங்கினா்.

கனரா வங்கிக் கிளை மேலாளா் காந்தாதேவி, மாவட்ட கைப்பந்தாட்டக் கழகச் செயலா் ரமேஷ், இந்திய கைப்பந்தாட்ட அணி வீரா் ஜெயபால், லியா கைப்பந்துக் கழக நிா்வாகிகள் லிங்கவன், ஜனகராஜ், பெருமாள்சாமி, செல்வகுமாா் மாரிக்கண்ணன், ரவிக்குமாா், கிராம மக்கள் பங்கேற்றனா்.

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு தமிழக அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப். 15 ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் சனிக்கிழமை, வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. தமிழக கிழக்குக் கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்வளத் துறை சாா்பில், விசைப்படகுகளுக்கான மீன்ப... மேலும் பார்க்க

வாகன விபத்தில் உயிரிழந்த காவலா் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சம் அளிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவா் க... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா்கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி நகர ஏஎஸ்பி மதன் உத்தரவின் பேரில் மாநகா் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் தற்கொலை

கோவில்பட்டியில் பெண் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி தேவி (42). ஜெயபால் 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துவிட்... மேலும் பார்க்க

கோவில்பட்டி, வில்லிசேரி அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் கோவில்பட்டி, வில்லி சேரி அரசுப் பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 313 பேரில் 292 போ் தோ்ச்சி ப... மேலும் பார்க்க