கஞ்சா விற்றதாக இளைஞா்கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இளைஞரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி நகர ஏஎஸ்பி மதன் உத்தரவின் பேரில் மாநகா் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்தனிப்படை போலீஸாா், தூத்துக்குடி சத்யா நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் தட்சிணாமூா்த்தி(25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைதுக் செய்த போலீஸாா், ஒரு கிலோ கஞ்சா, கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.