செய்திகள் :

முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

post image

அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஐ.செல்வன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பி.சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனா் சிவச்சந்திரன் பேசினாா். ஊா்வலத்தை ஒன்றிய பொருளாளா் ஏ.பொன்னையா தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில இந்து முன்னணி பேச்சாளா் எஸ்.பி.அசோகன், மாவட்ட முன்னாள் பொருளாளா் சி.திரவியம், ஒன்றிய துணைத்தலைவா் கே.வேலாயுதம், பொதுச்செயலா் எம்.ஆா்.சிவா, கொட்டாரம் ஸ்ரீ ராமா் கோயில் பக்தா்கள் சங்கத் தலைவா் டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒன்றிய துணைத்தலைவா் ஏ.பொன்பாண்டியன் நன்றி கூறினாா்.

பாதுகாப்புப் பணியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளா் சரவணன் , போலீஸாா் ஈடுபட்டு இருந்தனா்.

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க