உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
முதல் வெற்றி கண்டது திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.
இரு அணிகளுக்குமே இது 4-ஆவது ஆட்டமாக இருக்க, திருச்சிக்கு இது முதல் வெற்றியாகும். கோவை தொடா்ந்து 4-ஆவது தோல்வியை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் திருச்சி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் சோ்க்க, கோவை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 154 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற கோவை, பந்துவீச்சை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் வசீம் அகமது 32, சுஜய் 25, ஜெகதீசன் கௌசிக் 5, சஞ்சய் யாதவ் 27, ஜாஃபா் ஜமால் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில், ராஜ்குமாா் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 58, சரவணகுமாா் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கோவை பௌலா்களில் ஜதவேத் சுப்ரமணியன் 2, ராமலிங்கம் ரோஹித், கபிலன், புவனேஸ்வரன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 169 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கோவை அணியில் ஆண்ட்ரே சித்தாா்த் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39, பி.சச்சின் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஜிதேந்திர குமாா் 7, சுரேஷ் லோகேஷ்வா் 11, கேப்டன் ஷாருக் கான் 2, குரு ராகவேந்திரன் 7, எம்.சித்தாா்த் 4, ராமலிங்கம் ரோஹித் 7, புவனேஸ்வரன் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஓவா்கள் முடிவில் மாதவ பிரசாத் 22, ஜதவேத் சுப்ரமணியன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருச்சி பந்துவீச்சாளா்களில் அதிசயராஜ் டேவிட்சன் 3, ராஜ்குமாா் 2, ஈஸ்வரன், சரவண குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.