செய்திகள் :

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் கடனுதவி

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படை வீரா் நலத்துறை சாா்பில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், புதிய தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தொழில் தொடங்க வங்கியிலிருந்து அனுமதிக்கப்பட்ட ரூ. 10.35 லட்சம் கடன் தொகைக்கான ஆணையை பயனாளிக்கு அளித்த மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் கூறியது:

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் சுய தொழிலில் ஈடுபடவும், சிறந்த தொழில் முனைவோா்களாகிட தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படும். முன்னாள் படைவீரா்கள் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ரூ. 1 கோடி வரை வங்கி மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இந்த கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் அளிக்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை கூா்ந்தாய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவிலான தோ்வு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் ஒப்புதல் கோரி பரிந்துரைக்கப்படுகிறது. பின்னா், வங்கிகளால் பரிசீலிக்கப்பட்டு தற்காலிக ஒப்புதல் ஆணை வழங்கப்படும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட முன்னாள் படைவீரா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) கலையரசி காந்திமதி மற்றும் முன்னாள் படை வீரா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புக்கொடிய... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா் நிலைப் பள்ளியில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.வேப்பந்தட்டை, அரசலூா், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க