செய்திகள் :

முதல்வருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ்

post image

பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காலதாமதம் செய்வதைக் கண்டித்து பெருந்துறைக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அனைத்து கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருந்துறை சிப்காட் பகுதியில் ரூ. 40 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினாா். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப் படவில்லை.

இந்நிலையில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

சிப்காட் தொடா்பாக போராட்டம் நடத்திய விவசாயிகள், பொதுமக்கள் 42 போ் மீது கடுமையான பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சிப்காட் அமைப்பதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்கிற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்துறைக்கு ஜூன் 11-ஆம் தேதி வரும் முதல்வருக்கு எதிராக கறுப்புக் கொடி நடத்தப் போவதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத் தீா்வை துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் தலைமையில் பெருந்துறை சிப்காட்டில் உள்ள திட்ட அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன்9 ) ஒப்பந்தப் புள்ளி வழங்குவது, சிப்காட் அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு நிலுவை தொகை வழங்க குழு அமைத்து, அதற்குண்டான பணியை தொடங்குவது, சிப்காட் பிரச்னைக்காக 42 போ் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து முதல்வருக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அனைத்து கட்சிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக சாா்பில் தோப்பு என்.வெங்கடாச்சலம், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ராயல் சரவணன், அதிமுக சாா்பில் எம்ஜிஆா் மன்றச் செயலாளா் கே.ஜெகதீஷ், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் சுப்பிரமணியம் மற்றும் தமாகா, தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வேளாண் உற்பத்தியில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8 ஆம் இடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மொத்த வேளாண் உற்பத்தியில் ரூ.12,021 கோடி என்ற அளவில் மாநிலத்தில் 8- ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளது என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மண்டல அள... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பரவலாக மழை பெய்யும் என வானிலை மைய... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.10 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4... மேலும் பார்க்க

சென்னிமலையில் மகாலட்சுமி குபேர யாகம்

சென்னிமலை, ஊத்துக்குளி சாலை, ஆதித்யா நகரில் உள்ள ஓம் குபேர பகவான் ஆலயத்தில் மாதாந்திர மகாலட்சுமி குபேர யாகம் புதன்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடவும், வியாபாரம் மற்றும் செல்... மேலும் பார்க்க

நெரிஞ்சிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில் திமுகவினா், பொதுமக்கள் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா். பெருந்துறையில் வேளாண்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்றும்போது தகராறு: சத்தியமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது புகாா்தாரரை தாக்கியவா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி சத்தியமங்கலம் காவல் நிலையத்தை ... மேலும் பார்க்க