செய்திகள் :

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை; இப்போது எப்படி இருக்கிறார்? - துரைமுருகன் கொடுத்த அப்டேட்!

post image

'மருத்துவமனையில் முதல்வர்!'

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் துரை முருகன் கூறியிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

'அப்டேட்!'

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21 ஆம் தேதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது தலைசுற்றல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை அறிக்கையும் அதை உறுதி செய்தது. ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் சில பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கும் முதல்வரை உதயநிதி ஸ்டாலின், அழகிரி, துரை முருகன் ஆகியோர் தொடர்ந்து நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

'முதல்வர் நலமாக இருக்கிறார். இன்னும் 2-3 நாள்களில் வீடு திரும்பிவிடுவார்.' என்றே அவர்கள் கூறி வந்தனர். முதல்வரும் நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தைப் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

'ஆஞ்சியோ...'

இந்நிலையில்தான் துரை முருகன் முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். 'முதல்வருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது. இதயத்தில் எந்த அடைப்பும் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார்.' என துரைமுருகன் கூறியிருக்கிறார்.

ஜூலை 26, 27-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக தற்போது இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம்நேற்று இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமருடனான சந்திப்ப... மேலும் பார்க்க

`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன் | Interview

சிவகங்கை அஜித் குமார் சித்ரவதை கொலை வழக்கு, டி.எஸ்.பி சுந்தரேசன் வெளிப்படையாக உயர் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் காவல்துறை மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வர... மேலும் பார்க்க

``நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், மக்களை யார் பாதுகாப்பது? - எடப்பாடி கேள்வி

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், கடந்த 1997 - ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து தற்பொழுது துணை கண்காணிப்பாளராக ... மேலும் பார்க்க

``ISI முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி அதிமுக'' - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். கந்தர்வக... மேலும் பார்க்க

'எலான் அமெரிக்காவில் வேண்டும்..!' - ட்ரம்ப்பின் திடீர் மாற்றம்; நிம்மதி பெருமூச்சுவிடும் எலான் மஸ்க்

சில மாதங்களாக, நட்பிற்கு இலக்கணமாக இருந்து வந்தார்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். 'ஒன் பிக் அண்டு பியூட்டிஃபுல் பில்'லை ட்ரம்ப் அறிமுகம் செய்ய, அந்த நட்பில... மேலும் பார்க்க