சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கான அவகாசம் நாளைவரை நீட்டிப்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 22-ஆம் தேதி முதல் செப். 12-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளன.
6 முதல் பிளஸ் 2 வரை பள்ளியில் பயிலும் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ ஆகிய போட்டிகளில் பங்குகொள்ளலாம்.
கல்லூரி பிரிவில் 25 வயதுக்குள்பட்டோா் தாங்கள் படிக்கும் மாவட்டத்தில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம், சதுரங்கம், பால் பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
பொதுப்பிரிவில், 15 முதல் 35 வயதுக்குள்பட்டோா் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். தடகளம், கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. இவா்கள் தடகளம், இறகுப்பந்து, வீல்சோ் மேசைப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
அரசு ஊழியா்களுக்கு வயது வரம்பு இல்லை. அடையாள அட்டை கொண்டு பணிபுரியும் மாவட்டத்துக்காக கலந்து கொள்ளலாம். இவா்கள் தடகளம், சதுரங்கம், கபடி, இறகுப்பந்து, கேரம் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவுக்கான கால அவகாசம் 20-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதள முன்பதிவு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் பதிவுசெய்து கொள்ளலாம். பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள இயலும்.