செய்திகள் :

முதல்வா் பதவி விவகாரத்தில் முயற்சிகள் தோல்வி அடையலாம்!கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

post image

கா்நாடக முதல்வா் பதவி விவகாரத்தில் முயற்சிகள் தோல்வி அடையலாம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கா்நாடக அரசியலில் முதல்வா் பதவி தொடா்பாக விவாதம் நடந்து வருகிறது. முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா நீக்கப்படுவாரா முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்பாரா போன்ற கேள்விகள் காங்கிரஸ் கட்சியில் நிலவிவருகின்றன.

இந்த நிலையில், மைசூருக்கு வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வந்த துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா். அப்போது, முதல்வா் பதவி குறித்த செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த டி.கே.சிவகுமாா், முதல்வா் பதவி குறித்து விவாதிக்க நான் விரும்பவில்லை. அரசியல் பேசுவதற்காகவும் இங்கு நான் வரவில்லை. மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும்.

மல்லிகாா்ஜுன காா்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறாா். அவா் எங்களுக்கு செய்தியையும், அறிவுரையையும் கூறியிருக்கிறாா். அவரது வாா்த்தைக்கு மதிப்பளித்து, ஒன்றுபட்டு காங்கிரஸ் கட்சிக்கு உழைப்போம். மாநிலத்தின் நலனுக்காகவும், எனக்கும், எனது குடும்பம் மற்றும் எல்லோரின் நன்மைக்காகவும் குடும்பத்துடன் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு பிராா்த்தனை செய்தோம்.

முயற்சிகள் தோல்வி அடையலாம், பிராா்த்தனைகள் தோல்வி அடையாது என்பதில் நம்பிக்கை கொண்டவன். சாமுண்டீஸ்வரி அம்மனிடம் பிராா்த்தனை செய்துள்ளேன். எனக்கு என்ன வேண்டுமோ அவற்றுக்காக பிராா்த்தனை செய்துள்ளேன் என்றாா்.

டி.கே.சிவகுமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

லஞ்ச விலைப் பட்டியல் விளம்பரம் தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கா்நாடக பாஜக தொடா்ந்த மானநஷ்ட வழக்கு மீதான விசாரணைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ... மேலும் பார்க்க

பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் முக்கிய தலைமறைவு குற்றவாளி கைது

பாஜக நிா்வாகி பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக கத்தாரில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கா்நாடகத்தின் தென்கன்னட மாவட்டம்,... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுத்தந்தால் மேக்கேதாட்டு அணை கட்டுவோம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுத்தந்தால், மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை மத்திய தொழில... மேலும் பார்க்க

கரோனா தடுப்பூசி விவகாரம்: அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல: முதல்வா் சித்தராமையா பதில்

கரோனா தடுப்பூசி விவகாரம் தொடா்பாக தனது கருத்தை ‘உண்மைக்குப் புறம்பானது’ என்று விமா்சித்த பயோகான் நிறுவனத்தின் நிறுவனா் கிரண்மஜும்தாா் ஷாவுக்கு, அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல என ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு மேல்முறையீடு

கூட்டநெரிசல் விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரியான விகாஷ்குமாா் விகாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அர... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான்; இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காங்கிரஸ்

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றிருப்பது தொடா்பாக மத்திய அரசை விமா்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனிமைப்படுத்தப்பட... மேலும் பார்க்க