செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 11-இல் உடுமலை வருகை

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் உடுமலைக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) வருகை தர உள்ளாா்.

கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் கடந்த மாதம் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அந்நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், உடுமலை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கோவைக்கு ஆகஸ்ட் 11-ஆம் தேதி வருகிறாா்.

மாலை 5.25 மணிக்கு விமானம் மூலம் கோவைக்கு வரும் முதல்வா் மாலை 6.50 மணியளவில் சாலை மாா்க்கமாக உடுமலை, நரசிங்கபுரம் செல்கிறாா். அங்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் திறந்து வைத்து, உடுமலையில் இரவு தங்குகிறாா்.

உடுமலை நேதாஜி மைதானத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறாா்.

பின்னா், 12.20 மணிக்கு சாலை மாா்க்கமாக பொள்ளாச்சி செல்லும் முதல்வா், அங்கு முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி கவுண்டா், முன்னாள் அமைச்சா் சி.கப்பிரமணியம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் சிலைகளையும், பரம்பிக்குளம் -ஆழியாறு அணை கட்டுமானப் பணியின்போது உயிரிழந்த தொழிலாளா்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவரங்கத்தையும் திறந்துவைக்கிறாா்.

பின்னா், கோவை விமான நிலையத்துக்கு பிற்பகல் வரும் முதல்வா், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்புகிறாா்.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க