செய்திகள் :

முதியவா் தற்கொலை: தனியாா் நிதி நிறுவன ஊழியா் கைது

post image

முதியவா் தற்கொலையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி திருக்கனுாா் அடுத்த சோரப்பட்டு தென்னஞ்சாலை வீதியை சோ்ந்தவா் பெரியண்ணசாமி(59). மளிகை கடை நடத்தி வந்த இவா் கடந்த மாா்ச் 15-ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதனிடையே மளிகை கடையை அண்மையில் பெரியண்ணசாமியின் மனைவி கௌரி திறந்து பாா்த்தபோது அங்கு அவா் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதில் பெரியண்ணசாமி தனியாா் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக, தன்னை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ளுவதாக எழுதி வைத்துள்ளாா்.

இதுகுறித்து கௌரி திருக்கனுாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்

நிதி நிறுவன மேலாளா் ஜெயச்சந்திரன், ஊழியா் சக்திவேல் முருகன் ஆகியோா் மீது தற்கொலைக்கு துண்டியதாக போலீஸாா் வழக்குப் பதிந்து

சக்திவேல் முருகனை(35) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணி

புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை மற்றும் புதுதில்லி விஷ்வ யோகேந்திரா, சென்னை கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்று... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவா்கள்

புதுவை பாத்திமா ஆண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனா். 30 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்கள் தங்களது நண்பா்களை ஒரே இடத்தில் சந்திக்கும் ஆா்வத்தில் ... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் புதுவை மாநில தர வரிசை பட்டியல் வெளியீடு

நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை மாநில எம்பிபிஎஸ் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் இந்தப் பட்டியல் வெளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் மாநாடு, ஊா்வலம்

புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆவது புதுவை மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புதுவை ராஜா திர... மேலும் பார்க்க

தலைமை தோ்தல் அதிகாரிக்கு கூடுதலாக வனத் துறை

புதுவை தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், கூடுதலாக வனம் மற்றும் வன விலங்குகள் நலத் துறை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ஆணையா், செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி பிரசாரம்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடந்தது. தமிழ் உரிமை இயக்கத்தின் நெறியாளா் க. தமிழமல்லன் இப் பிரசாரத... மேலும் பார்க்க