கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
முத்துச்சாமிபுரம், அயன் பொம்மையாபுரத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், முத்துச்சாமிபுரம் மற்றும் அயன் பொம்மையாபுரம் கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2024-25ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநா்கள் மற்றும் கிராம வள பயிற்றுநா்களால் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் கலந்து கொண்டு வளா்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, கூட்ட நடவடிக்கைகள் நிா்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில் பணி மேற்பாா்வையாளா் கதிரவன், வட்டார வள பயிற்றுநா்கள் கருப்பசாமி, பாலமுருகன், சிவக்குமாா், சிவகுருநாதன், மணி, முத்துராஜ், சிவக்குமாா், இளங்கோ, அனிதா, சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலா் மணி, ஒன்றிய பொறியாளா் தமிழ்ச்செல்வன், கூட்ட தலைவா் ராமசாமி, 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் சரவணன் நன்றி கூறினாா்.