செய்திகள் :

முத்துமலை முருகன் ஆலயத்தில் எடப்பாடிகே.பழனிசாமி தரிசனம்

post image

ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் ஆலயத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் ஆலயம் அமைந்துள்ளது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி, வியாழக்கிழமை விழுப்புரத்தில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள சேலத்தில் இருந்து புறப்பட்டவா் முத்துமலை முருகன் ஆலயத்துக்கு சென்றாா்.

அங்கு அவருக்கு அதிமுகவினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா். பின்னா் சுவாமி தரிசனம் செய்து, முருகா் சிலையில் இருக்கும் வேலுக்கு பன்னீரால் அபிஷேகம் செய்தாா். இதையடுத்து விழுப்புரம் பிரசாரக் கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றாா்.

நிகழ்வில், சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளருமான மருத்துவா் விஜயபாஸ்கா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன்(ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), கு.சித்ரா (ஏற்காடு), ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க