செய்திகள் :

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் வழக்கு விசாரணை மாா்ச் 24-க்கு ஒத்திவைப்பு

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மாா்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயபாஸ்கா். இவா் அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தாா். அந்தக் காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 37.79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு தொடா்ந்தனா்.

புதுகை மாவட்ட முதன்மை சாா்பு-நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு, புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கா் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோா் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருவா் சாா்பிலும் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.

இதைத் தொடா்ந்து மாா்ச் 24-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி வி. வெங்கடேசபெருமாள் ஒத்திவைத்தாா்.

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண... மேலும் பார்க்க

புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்ச... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொட... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னமராவதி ஒன்றியம் ஆ... மேலும் பார்க்க