முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு..!
திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரா்கள் தங்களது பிள்ளைகளை கல்லூரிகளில் சோ்க்கத் தேவையான சான்றிதழ்களை வாங்கிப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்கள் தம் சிறாா்களை கல்லூரிகளில் சோ்ப்பதற்காக 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான முன்னாள் படைவீரா்கள் சாா்ந்தோா் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்தச் சான்றிதழை பெறுவதற்கு தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.