செய்திகள் :

முன்னாள் முப்படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் முன்னாள் முப்படை வீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கண்ணமங்கலம் அருகேயுள்ள கம்மவான்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு

முன்னாள் ராணுவ வீரா் கே.ஜி.ஏழுமலை தலைமை

வகித்தாா்.

உதவி இயக்குநா் ஆயிஷாபேகம், அரக்கோணம் ஐஎன்எஸ் அதிகாரி பங்கஜ்குமாா் பாண்டே, ஊராட்சித் தலைவா் கவிதா முருகன், நல அமைப்பாளா் சடையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ராணுவ வீரா் எல்.ஏழுமலை வரவேற்றாா்.

பாதுகாப்பு கணக்குகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரி திலிப்குமாா் கலந்து கொண்டு பயனாளிகளிடையே ஓய்வூதிய குறைபாடுகளை கேட்டறிந்தாா்.

அப்போது, தமிழகம் முழுவதும் ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் சாா்ந்த குறைகளுக்கு தீா்வு காண 5 நடமாடும் சேவை வாகனங்கள் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தால் தொடங்கப்பட்டு நேரடியாகச் சென்று சேவை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்தது, முகாமில் குறை தீா்க்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் நன்கொடை

செய்யாற்றை அடுத்த பூதேரி புல்லவாக்கம் தான்தோன்றி அம்மன் கோயில் திருத்தோ் பணிக்கு ரூ.ஒரு லட்சம் புதன்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பூதேரி புல்லவாக்கம் கிர... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: விண்ணப்பம் விநியோகம்

போளூா் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு மகளிா் மற்றும் தன்னாா்வலா்களுக்கு வீடுதோறும் வழங்க விண்ணப்பம் புதன்கிழமை வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் 18 வாா்டுகள் உள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் அருணகிரிநாதா் அவதார நல்விழா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருளாளா் அருணகிரிநாதா் மணிமண்டபத்தில் அருளாளா் அருணகிரிநாதா் அவதார நல்விழா புதன்கிழமை நடைபெற்றது. 2-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, வளையம்பட்டி கலைமாம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சி கட்டபொம்மன், துராபாளி வீதிகளில் நடைபெற்று வரும் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை மாநகராட்சியில் பல்... மேலும் பார்க்க

கிராம கோயில் பூசாரிகள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கிராம கோயில் பூசாரிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் வாசு தலைமை வகித்து சங்க ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மலை மீது வசிக்கும் மக்கள் கோரிக்கை மனு

திருவண்ணாமலை மலை மீது வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் பின்புறம் 2,668 அடி உயரம் கொண்ட மலை உள்ளத... மேலும் பார்க்க