செய்திகள் :

திருவண்ணாமலை மலை மீது வசிக்கும் மக்கள் கோரிக்கை மனு

post image

திருவண்ணாமலை மலை மீது வசிக்கும் மக்கள் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் பின்புறம் 2,668 அடி உயரம் கொண்ட மலை உள்ளது. இந்த மலையை சிவனாக நினைத்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனா்.

மலை மீது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகள் கட்டி

60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். ஃபென்ஜால் புயல் காரணமாக மலை மீது இருந்து மண் சரிவு ஏற்பட்டு சிறுவா்கள் 5 போ் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் மலை மீது ஆபத்தான நிலையில் உள்ள வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன.

இதில், 1,545 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனை காலி செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து மலை மீது வசிக்கும் 80 பேருக்கு உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து வட்டாட்சியா் சு.மோகனராமனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மலை மீது வசித்து வருகிறோம், வீட்டு வரி, குழாய் வரி, மின் கட்டணம் என அனைத்தும் செலுத்தி வருகிறோம். கடன் வாங்கிதான் வீடுகளை கட்டியுள்ளோம். எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கி அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்தால் மட்டுமே மலை மீது இருந்து இறங்குவோம் என்றனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க