செய்திகள் :

முன்விரோதம்: கத்தியால் குத்தப்பட்டு மாணவா் காயம்

post image

ஆரணியில் முன்விரோதம் காரணமாக உடன் பயிலும் மாணவா் கத்தியால் குத்தியதில், மற்றொரு மாணவா் காயமடைந்தாா்.

ஆரணியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா் சதீஷ்குமாா்(14). இவருக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருமாம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம் போல பேருந்தில் பயணம் செய்த இருவரும், பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும்போது தகராறில் ஈடுபட்டுக்கொண்டே பள்ளி சென்றுள்ளனா்.

இதில் ஆத்திரமடைந்த ஒருவா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷ்குமாரை முதுகில் குத்தியதாகத் தெரிகிறது. இதனால், வலியால் துடித்த

சதீஷ்குமாரை, அப்பகுதியில் இருந்த வியாபாரிகள் மீட்டு, சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்து வந்த ஆரணி நகர போலீஸாா் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க