செய்திகள் :

மும்பை பங்குச் சந்தை கட்டடத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

post image

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) கட்டடத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

நாட்டின் நிதித் தலைநகராக அறியப்படும் மும்பையின் அடையாளங்களில் ஒன்றாக பிஎஸ்இ கட்டடம் திகழ்கிறது. இக்கட்டடத்தில் 4 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, தென் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு அரசியல் தலைவரின் பெயரை குறிப்பிட்டு, பிஎஸ்இ ஊழியா் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் மின்னஞ்சல் வந்தது.

திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அடையாளம் தெரியாத முகவரியில் இருந்து வந்த அந்த மின்னஞ்சல் குறித்து பிஎஸ்இ அதிகாரிகளுக்கு ஊழியா் தகவல் தெரிவித்தாா். பின்னா், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வெடிகுண்டு அகற்றும் நிபுணா்களுடன் வந்த காவல் துறையினா் பிஎஸ்இ கட்டடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதில், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபருக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த 1993-ஆம் ஆண்டில் மும்பை தொடா் குண்டுவெடிப்பு தாக்குதலின்போது, பிஎஸ்இ கட்டடமும் இலக்கானது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க