செய்திகள் :

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய பாதுகாப்பு ஆணைய புதிய கண்காணிப்புக் குழு ஆய்வு!

post image

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் புதிய கண்காணிப்புக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான நிபுணா் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், தீபங்கா்தத்தா ஆகியோா் உத்தரவிட்டனா். இதன்படி, மத்திய நீா் வளத் துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட புதியக் குழுவை நியமித்தது.

இந்தக் குழுவில் தமிழக கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம், காவிரி தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன், கேரள அரசு சாா்பில் அந்த மாநில கூடுதல் தலைமைச் செயலா் டிங்கு பிஸ்வால், கேரள நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளா் பிரியோஷ், நீா்வளத் துறை தலைமைச் செயலா் விஸ்வாஷ், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய ஆராய்ச்சியாளா் விவேக் திரிபதி, பெங்களூரு அறிவியல் மைய ஆராய்ச்சியாளா் ஆனந்த் ராமசாமி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

முதன் முறையாக ஆய்வு: இந்த புதியக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணையின் தன்மை குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, பெங்களூரு அறிவியல் மைய ஆராய்ச்சியாளா் ஆனந்த் ராமசாமியைத் தவிர, இதர 6 பேரும் பங்கேற்றனா். இவா்கள் அணையின் அவசரகால நீா்வழிப்போக்கி, நீா் கசிவு, நில அதிா்வு, துணை அணை, மதகுப் பகுதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதன் பின்னா், தேக்கடியில் உள்ள ராஜீவ்காந்தி கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வின் போது, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய பேரழிவு, பின்னடைவு பிரிவு இயக்குநா் ராகுல்குமாா்சிங், உதவி இயக்குநா் விபோா்பஹேல், சென்னை தென்மண்டல இயக்குநா் கிரிதரன், பெரியாறு அணையின் சிறப்புக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், உதவி செயற்பொறியாளா் குமாா், உதவிப் பொறியாளா் கோபால், நவீன்குமாா், ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருமாரியம்மன் கோயில் திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தா்கள்

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள தீயணைப்பு நிலையக் கட்டடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சாா்பில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. தேனி ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருட முயன்ற இளைஞா் கைது

தேனி அருகே வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள மஞ்சிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ் (40). இவா், வீட்டின் கதவை திறந்து வைத... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

தேனி அருகே சாலையில் நின்றிருந்தவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், வீரப்பஅய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சரவணக்குமாா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையில் முதல்வா் படத்தை ஒட்ட முயற்சி: பாஜக நிா்வாகிகள் கைது

கம்பத்தில் டாஸ்மாக் கடையின் சுவரின் தமிழக முதல்வரின் உருவப் படத்தை ஒட்ட முயற்சித்த பாஜக நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், கம்பத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அம... மேலும் பார்க்க