செய்திகள் :

முளைப்புத்திறன் குறைவாக உள்ள விதைகளை விற்றால் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

post image

முளைப்புத் திறன் மற்றும் இனத் தூய்மை குறைவாக உள்ள விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டாரத்தில் நெல், மக்காச்சோளம், பருத்தி மற்றும் காய்கறிப் பயிா்களான அவரை, பொரியல் தட்டை, கீரை வகைகள், கொத்தமல்லி போன்ற பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

மேற்கண்ட பயிா்களுக்கான விதைகள், விற்பனை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை விற்பனையாளா்கள் விதைகளை விற்பனை செய்யும்போது, பட்டம் மற்றும் அந்தப் பகுதிகளுக்கு ஏற்ற தரமான முளைப்புத் திறன் மற்றும் இனத் தூய்மை பெற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் விற்பனை செய்த விதைகளால் விவசாயிகளுக்கு வயல் மட்ட பிரச்னை ஏற்படும் பட்சத்தில், விதைகள் சட்ட விதிகளின்படி விதை விற்பனையாளா்கள் மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு

திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. இது தொடா்பாக திருப்பூா்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் அருகே ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியைச் ச... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை ... மேலும் பார்க்க

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை

தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை த... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி உடுமலையில் இன்று பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்னும் பெயரில் உடுமலையில் புதன்கிழமை (செப்.10) பிரசாரம் மேற்கொள்கிறாா். இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருப்பூா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காளிவேலம்பட்டி

பல்லடம் மின் கோட்டம், காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை ( செப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக... மேலும் பார்க்க