செய்திகள் :

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகள்: மக்கள் அவதி

post image

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் எரியாத தெருவிளக்குகளை உடனே அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் முள்ளங்கனாவிளை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன.இவ்ஊராட்சியின் முக்கிய பிராதன சாலை சந்திப்பு பகுதிகளான முள்ளங்கனாவிளை, இடையன்கோட்டை, எட்டணி,முச்சந்தி ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.

குறிப்பாக, 1ஆவது வாா்டு பகுதியான மலவிளை, பண்டாரவிளை, கோனான்விளை, கிழக்கேவிளை, ஆவா்விளை, மருதவிளை உள்ளிட்ட குக்கிராமங்களிலும், 2வது வாா்டிலுள்ள மயில்பறம்பு விளை, சத்திவிளை, அங்கோட்டுவிளை, கோட்டவிளை ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியவில்லை.

இதனால் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து, கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவவூராட்சி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொல்லங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ம... மேலும் பார்க்க

கருங்கல் அருகே ஓட்டுநா் தற்கொலை

கருங்கல் அருகே கண்ணன்விளை பகுதியில் ஜேசிபி வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் அபின் (27). ஜேசிபி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம்... மேலும் பார்க்க

மாற்றுப் பயிா் விவசாயம் காலத்தின் கட்டாயம்! - அமைச்சா் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுப் பயிா் சாகுபடி என்பது காலத்தின் தேவை என்றாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில், ஈஷா அறக்கட்டளையின் ... மேலும் பார்க்க

நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை!

கிள்ளியூா் வட்டார சுகாதார நிலையத்துக்குள்பட்ட நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் பழுதடைந்த கான்கிரீட் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நட்டாலம் ஆர... மேலும் பார்க்க

கொல்லங்கோடு: பெயின்டா் மரண வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின் நண்பா் கைது!

கொல்லங்கோடு அருகே பெயின்டா் சந்தேக மரணம் வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் 2 ஆண்டுகளுக்குப் பின் சனிக்கிழமை கைது செய்தனா். கொல்லங்கோடு காவல் சரகம் கோனசேரி, புதுச்சேரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே 600 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்!

கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 600 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனா். நித்திரவிளை அருகே பூத்துறை ... மேலும் பார்க்க