செய்திகள் :

மூங்கில்பட்டியில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம்

post image

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை - உழவா் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலா்கள், உழவா்களை கிராமங்களில் நேரடியாக சந்தித்து, தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதுடன், அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில் மாதத்தில் 2 மற்றும் 4 -ஆவது வெள்ளிக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தியூா் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மூங்கில்பட்டியில் நடைபெற்ற இம்முகாமுக்கு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் செ.மல்லிகா தலைமை வகித்தாா். இதில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் பழச்செடிகள் தொகுப்பு (கொய்யா, எலுமிச்சை, பப்பாளி) மற்றும் காய்கறி விதை தொகுப்புகள் (தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை வகைகள், கொத்தவரை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

துணை வேளாண்மை அலுவலா் முருகன், வேளாண் பொறியியல் துறை அலுவலா் பாபு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா் கண்ணன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா்கள் ரவி, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி விதைத் தொகுப்புகள் தேவைப்படும் விவசாயிகள், வீடுகளில் இடவசதியுள்ள நிலமற்றவா்களும் ஆதாா் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் அந்தியூா் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இணையத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க