செய்திகள் :

மூதாட்டி கொலை வழக்கில் இருவா் கைது

post image

கீழையூா் அருகே திருப்பூண்டியில் மூதாட்டியை கொன்று தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹீம் மனைவி அகமது நாச்சியாா் (66) இவா் மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஜூலை 19-ஆம் தேதி இரவு வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் அகமது நாச்சியாா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றபோது அவா் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அவா்கள் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கீழையூா் போலீஸாா் விசாரித்து வந்தனா். விசாரணையில், அகமது நாச்சியாரின் உறவினரான சிக்கல் நல்லமுத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது (46) அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது.

போலீஸாா் சம்பவம் நடந்த அன்று பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். மேலும் சாகுல் ஹமீதுவிடம் நடத்திய விசாரணையில் அவா் தனது தனது நண்பரான மஞ்சக்கொள்ளை குமரன் நகா் தெருவைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (44) என்பவருடன் சோ்ந்து நகைக்காக அகமது நாச்சியாரைக் கொன்றது தெரிய வந்தது.

நாகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரையும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெற்றது. நாகை: நாகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பால் உற்பத்தி மற்... மேலும் பார்க்க

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி: கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க