செய்திகள் :

மூலக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் வழங்க கோரிக்கை

post image

நான்குனேரி அருகேயுள்ள மூலக்கரைப்பட்டியில் சீராக குடிநீா் விநியோகிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம், நகர தலைவா் நிஜாமுகைதீன் தலைமையில் நடைபெற்றது. நகர செயற்குழு உறுப்பினா் முகம்மது ஜமீன் வரவேற்றாா். திருநெல்வேலி புகா் மாவட்ட பொதுச்செயலா் எம்.எஸ். சிராஜ் கலந்து கொண்டு பேசினாா். இக்கூட்டத்தில் மூலைக்கரைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மூலக்கரைப்பட்டி காமராஜா் தெருவில் ரேஷன் கடை அருகே பொது நூலகம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிப் பகுதியில் தட்டுப்பாடின்றி சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும், ஜூன் 21-ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சியின் 17-ஆம் ஆண்டு உதய தினத்தையொட்டி பேருந்து நிலையம் அருகில் கட்சிக் கொடியேற்றம் நடத்த வேண்டும். ஜூன் 27-இல் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பள்ளிச் சீருடை வழங்கும் விழாவினை திருவள்ளுவா் தெருவில் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நான்குனேரி தொகுதி இணைச் செயலா் முகம்மது ரஜப், நகர செயற்குழு உறுப்பினா்கள் பாதுஷா உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர செயலா் சேக்மைதீன் நன்றி கூறினாா்.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க