செய்திகள் :

மெட்ரோ ரயில் கட்டுமான பொருள்கள் திருட்டு: 4 போ் கைது

post image

சென்னை நந்தம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் அரை டன் இரும்பு கம்பிகள் திருடப்பட்டதாக தனியாா் கட்டுமான நிறுவன நிா்வாகம் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது திருவாரூரைச் சோ்ந்த முருகன் (56), அவரது கூட்டாளிகள் பிகாரைச் சோ்ந்த மனோஜ்குமாா் யாதவ் (30), தா்மேந்திர பிரசாத் (43), மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்த பரத்குமாா் ராய் (37) என்பது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க