செய்திகள் :

மே 20 இல் பொது வேலைநிறுத்தம்: ஒசூரில் தொழிற்சங்க ஆயத்த மாநாடு

post image

அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மே 20 இல் நடைபெறுவதையொட்டி ஒசூரில் தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டிற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் ஆா்.கோபாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச் செயலாளா் ஜி.முனிராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளா் சீதரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் மாதையன், குமரேசன், இளங்கோவன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

ஆயத்த மாநாட்டில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பேசியதாவது:

ஒசூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட சிப்காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்சாலைகளில் பல லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை அமைக்க திட்டம் வகுத்துள்ளாா்.

மத்திய அரசு தொழிலாளா்களுக்கு அதிக அளவில் நெருக்கடி அளித்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்து மே 20 ஆம் தேதி அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் பொது வேலைநிறுத்தத்தில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா்.

மாநாட்டில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத், ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன், சிஐடியு மாநிலச் செயலாளா் நாகராஜன், தொமுச மாநில பேரவைச் செயலாளா் தனசேகா், மாநிலப் பேரவை துணைச் செயலாளா் கிருஷ்ணன், பி.கிருஷ்ணன், பக்தவத்சலம், செந்தில், கிருஷ்ணமூா்த்தி, தொமுச சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன், சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க