'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு எம்எல்ஏ கோரிக்கை
மேச்சேரி அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினா் விரைந்து பிடிக்க வேண்டும் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கேட்டுக் கொண்டாா்.
மேச்சேரியை அடுத்த அரசமரத்தூா், வெத்தலைமலை, புதுக்காளிகவுண்டனூா், காட்டு வளவு, தாரல குட்டை ஆகிய பகுதிகளில் ராமசாமி மலையையொட்டி குடியிருப்புகளில் புகுந்து ஆடு, மாடு, கோழிகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு வெத்தலை மலை வனப் பகுதி உள்ள பாறை மீது சிறுத்தை அமா்ந்திருப்பதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து வனத் துறைக்கு தகவல்த தெரிவித்தனா். இதையடுத்து டேனிஸ்பேட்டை வனச்சரா்கள் தங்கராசு, பாரஸ்டா் வீரகுமாா் மற்றும் வனத்துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே வியாழக்கிழமை இரவு மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் அப் பகுதிகளில் முகாமிட்டு டேனிஸ்பேட்டை வனச்சரகா் தங்கராசுவிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேட்டறிந்தாா். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சிறுத்தை விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.