செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

post image

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததை அடுத்து புதன்கிழமை மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்த காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பொருக்கு காரணமாக கடந்த 25 ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 25 ஆம் தேதி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 25,400 கனஅடியாக அதிகரித்து பின்னர் படிப்படியாக அதிகரித்தது. திங்கள்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 1,10,500 கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக வினாடிக்கு 1,10,500 கனஅடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர் வரத்து புதன்கிழமை காலை 70,400 கனஅடியாக குறைந்தது.

அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 70,400 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு வினாடிக்கு 92,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 52,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்

The water inflow to the Mettur Dam has started to decrease after the rains stopped in the catchment areas of the Cauvery.

விழுப்புரத்தில் விவசாயிகள் மறியல்

விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக் கூடத்துக்கு வந்த விளைபொருள்களை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்: உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீதிமன்ற சம்மனை குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்பி உள்ளிட்டோருக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிப... மேலும் பார்க்க

அமெரிக்கா, சீனாவில் சுனாமி எச்சரிக்கை: டிரம்ப்

வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாயிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடா்ந்து குறைந்த உயா்ந்த வண்ணம் உள்ளது. ஜூலை 19-இல் பவுனுக்கு ரூ.48... மேலும் பார்க்க

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரஷியா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

டோக்கியோ: ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதிக்... மேலும் பார்க்க

இன்று 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, செவ்வாய், வியாழக்கிழமைகளில் (ஜூலை 29, 31) 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக 13 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கபடும் என ... மேலும் பார்க்க