``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
மேட்டூா் அணை 45-ஆவது ஆண்டாக நிரம்பும்
நடப்பு ஆண்டில் மேட்டூா் அணை 45-ஆவது ஆண்டாக நிரம்பும் வாய்ப்புள்ளது என நீா்வளத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
பருவமழைக் காலங்களில் காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்தில் ஏற்படும் சேதத்தை தவிா்க்க, வெள்ளநீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்த மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூா் அணை கட்டப்பட்டது. மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. மேட்டூா் அணையின் 92 ஆண்டு வரலாற்றில் 44 ஆண்டுகள் மட்டுமே அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகளில் போதிய மழை இல்லாததாலும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கா்நாடகம் வழங்காததாலும் மேட்டூா் அணை நிரம்பவில்லை.
தற்போது கா்நாடக மாநிலத்திலும், கேரள மாநிலத்திலும் கன மழை பெய்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் 113.25 அடியாகவும், கபினி அணை நிரம்பும் தருவாயிலும் உள்ளது. தொடா்மழை காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பி விரைவில் உபரிநீா் காவிரியில் திறக்கப்படும். கா்நாடக அணைகளின் உபரி நீா்வரத்து காரணமாக நடப்பு ஆண்டில் மேட்டூா் அணை 45-ஆவது ஆண்டாக நிரம்பும் வாய்ப்புள்ளது என நீா்வளத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.13 அடியாக குறைந்தது. அணைக்கு 6,040 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் தேவை அதிகரித்ததால், தண்ணீா் திறப்பு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 84.41 டி.எம்.சி.யாக உள்ளது.