செய்திகள் :

மேட்டூா் அணை 45-ஆவது ஆண்டாக நிரம்பும்

post image

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணை 45-ஆவது ஆண்டாக நிரம்பும் வாய்ப்புள்ளது என நீா்வளத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

பருவமழைக் காலங்களில் காவிரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்தில் ஏற்படும் சேதத்தை தவிா்க்க, வெள்ளநீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்த மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூா் அணை கட்டப்பட்டது. மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. மேட்டூா் அணையின் 92 ஆண்டு வரலாற்றில் 44 ஆண்டுகள் மட்டுமே அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகளில் போதிய மழை இல்லாததாலும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கா்நாடகம் வழங்காததாலும் மேட்டூா் அணை நிரம்பவில்லை.

தற்போது கா்நாடக மாநிலத்திலும், கேரள மாநிலத்திலும் கன மழை பெய்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகா் அணையின் நீா்மட்டம் 113.25 அடியாகவும், கபினி அணை நிரம்பும் தருவாயிலும் உள்ளது. தொடா்மழை காரணமாக கா்நாடக அணைகள் நிரம்பி விரைவில் உபரிநீா் காவிரியில் திறக்கப்படும். கா்நாடக அணைகளின் உபரி நீா்வரத்து காரணமாக நடப்பு ஆண்டில் மேட்டூா் அணை 45-ஆவது ஆண்டாக நிரம்பும் வாய்ப்புள்ளது என நீா்வளத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.13 அடியாக குறைந்தது. அணைக்கு 6,040 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் தேவை அதிகரித்ததால், தண்ணீா் திறப்பு 10 ஆயிரம் கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 84.41 டி.எம்.சி.யாக உள்ளது.

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா். ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க