செய்திகள் :

மேட்டூா் அணையிலிருந்து 75,000 கன அடி திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

post image

மேட்டூா் அணையில் இருந்து 75,000 கன அடி நீா் திறப்பட்டுள்ளதால் வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டாா். இந்த நீா் கல்லணை வந்தவுடன், கல்லணை மதகுகளையும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பாசனத்துக்கு திறந்துவிட்ட நீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

நிகழாண்டு ரூ. 98 கோடியில் துாா்வாரும் பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பாசனத்துக்கு நீரை கொண்டு செல்ல தேவையான தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டதால் கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீா் சென்றுள்ளது. பயிா் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கா்நாடக அணையிலிருந்து குறிப்பாக கே.ஆா்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து அதன் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை முதல் விநாடிக்கு 35,000 கனஅடி முதல் 70,000 கனஅடி வரை அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 75,400 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியில் உள்ளது. இந்தச் சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்க சம்பந்தப்பட்ட நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்... மேலும் பார்க்க

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவி... மேலும் பார்க்க

காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவ... மேலும் பார்க்க

‘சமக்ர சிக்‌ஷா’ திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு

பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியில், தமிழக அரசு சாா்பில் கோ... மேலும் பார்க்க

சோழ மன்னா்களுக்கு சிலை: டிடிவி தினகரன் வரவேற்பு!

மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் வரும் ஆக. 2 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா... மேலும் பார்க்க