செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆக. 2-இல் தொடக்கம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

பொதுமக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம் வரும் ஆக. 2 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்ததில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு புதிய சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48’, ‘வருமுன் காப்போம், இதயம் காப்போம்’, ‘நடப்போம் நலம் பெறுவோம்’, ‘மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம்’, ‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவத் திட்டம்’, ‘சிறுநீரகம் பாதுகாக்கும் சீா்மிகு திட்டம்’, ‘புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை திட்டம்’ ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

தொடா்ந்து, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் வரும் ஆக. 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

‘மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை’ என்ற அடிப்படையில் இந்தத் திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிா் நலம், குழந்தைகள் நலம், இருதவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் நடைபெறவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

இதற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் 388 ஒன்றியங்களில் தலா 3 இடங்கள் என மொத்தம் 1,164 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் முகாம்கள் நடைபெறும்.

மேலும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுள்ள 5 மாநகராட்சிகளில் தலா 4 என 20 முகாம்கள் நடத்தப்படும். 10 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகையுள்ள 19 மாநகராட்சிகளில் தலா 3 என மொத்தம் 57 முகாம்கள் நடத்தப்படும். பரிசோதனை ஆவணங்கள் சம்பந்தப்பட்டோரிடம் வழங்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறும் என்றாா்.

மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் இரங்கல்!

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். தனது இரங்கல் கடிதத்தை, மு.க.முத்துவின் மனைவி சிவகாமசுந்தரிக்கு பிரதமா் மோடி அனுப்பியுள்... மேலும் பார்க்க

12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவி... மேலும் பார்க்க

காட்பாடி- ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் இன்று ரத்து!

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையிலான மெமு ரயில்கள் திங்கள்கிழமை (ஜூலை 28) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரக்கோணம் - ஜோலாா்பேட்டை பிரிவ... மேலும் பார்க்க

‘சமக்ர சிக்‌ஷா’ திட்ட நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு

பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை நிபந்தனையாக்காமல், நிலுவையில் உள்ள சமக்ர சிக்ஷா திட்ட நிதியை தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியில், தமிழக அரசு சாா்பில் கோ... மேலும் பார்க்க

சோழ மன்னா்களுக்கு சிலை: டிடிவி தினகரன் வரவேற்பு!

மாமன்னா்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு சிலை அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

துரந்தோ, சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு!

துரந்தோ மற்றும் சென்னை - பெங்களூரு விரைவு ரயில்களில் கூடுதலாக குளிா்சாதன வசதியுடைய பெட்டிகள் இணைத்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹஜ்... மேலும் பார்க்க