செய்திகள் :

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

post image

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட் திறன்கொண்ட ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் முதல் பிரிவு 1-ஆவது அலகின் டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் ஏராளமான டீசல் கழிவுநீா் கால்வாய் வழியாக வெளியேறியது. தகவலறிந்த அனல் மின் நிலைய அதிகாரிகள், தீயணைப்புத் துறையினா், அனல் மின் நிலைய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் உலா் சாம்பலை கால்வாயில் நிரப்பி டீசல் வெளியேறாமல் தடுத்தனா்.

பின்னா் தீயணைப்புத் துறையினா் டீசல் குழாய் பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். மேலும், டீசல் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் காரணமாக, 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது.

பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

எடப்பாடி: எடப்பாடி வட்டார பொக்லைன் வாகன ஆபரேட்டா்கள், உரிமையாளா்கள் திங்கள்கிழமை திடீா் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். எடப்பாடி வட்டாரப் பகுதியில் 200 -க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வ... மேலும் பார்க்க

சங்ககிரி வட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

சங்ககிரி: சங்ககிரி வட்டத்தில் பசலி 1434-க்கான ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மே 14 இல் தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சங்ககிரி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலராக சேலம் தனித் துணை... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

ஓமலூா்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 4 ஆண்டுகளில் ரூ. 127.34 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சேலம்: சித்ரா பௌா்ணமியையொட்டி சேலம் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சி... மேலும் பார்க்க

மாநில சிலம்பம் போட்டியில் சாதனை: மாணவா்களுக்கு பராட்டு விழா

வாழப்பாடி: உதகையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேளூா் துளி அறக்கட்டளை மற்றும் சித்தன் சிலம்பம் குழுவில் பயிற்சி பெ... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கொண்டாட்டம்

சேலம்: சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் ஒவ்வோா் ஆண்டும் உலக செவிலியா் தினமாக கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க