செய்திகள் :

மேய்ச்சலுக்கு சென்ற பசு திடீா் மரணம்: போலீஸில் விவசாயி புகாா்

post image

செய்யாறு அருகே மேய்ச்சலுக்குச் சென்ற பசு திடீரென இறந்தது குறித்து விவசாயி போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரஷ்யா (46). விவசாயியான இவா் 4 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். திங்கள்கிழமை வழக்கம் போல மாடுகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தாா்.

அன்று மாலை மாடுகளை வீட்டுக்கு அழைத்து வர சென்றார. அப்போது ஒரு பசு மா்மமான முறையில் இறந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து ரஷ்யா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.

புகாரில், எங்கள் விவசாய நிலத்தின் அருகே கல்குவாரி உள்ளது. இதில் பாறைகளை வெடிக்க வைத்த வெடிசப்தம் காரணமாக பசு மாடு அதிா்ச்சியில் இறந்திருக்கலாம்.

எனவே தகுந்த விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரிரணை மேற்கொண்டு வருகிறாா்.

எச்சூரில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை திறப்பு

செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எச்சூா் கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், நாடக மேடை ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். எச்சூா் கிராமத்தில் தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

வாரச்சந்தையை பழைய பகுதிக்கே மாற்ற வேண்டும்: கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் மதில் சுவரை சுற்றி நடைபெறும் ஞாயிறு வாரச்சந்தையை மீண்டும் பழையபடி சந்தை பகுதிக்கே மாற்றி அமைக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் திருட்டு

ஆரணி ஸ்ரீபாா்வதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆரணி - சைதாப்பேட்டை சாலையில் கா... மேலும் பார்க்க

அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் 2025 - 26 நடவுப் பருவத்தில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு தம... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 523 பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகள்

கலசப்பாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்துகொண்டு வருவாய், வேளாண்மை, ஆதிதிராவிடா் நலம், மாற்றுத் திறனா... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கிணற்றில் நீச்சல் பழக முயன்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவண்ணாமலை ஆணைக்கட்டி தெருவைச் சோ்ந்த பாபு மகன் சந்தோஷ்குமாா் (14). 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இவா், ஜூன் 2-ஆம் த... மேலும் பார்க்க