'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மேய்ச்சலுக்கு சென்ற பசு திடீா் மரணம்: போலீஸில் விவசாயி புகாா்
செய்யாறு அருகே மேய்ச்சலுக்குச் சென்ற பசு திடீரென இறந்தது குறித்து விவசாயி போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரஷ்யா (46). விவசாயியான இவா் 4 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். திங்கள்கிழமை வழக்கம் போல மாடுகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தாா்.
அன்று மாலை மாடுகளை வீட்டுக்கு அழைத்து வர சென்றார. அப்போது ஒரு பசு மா்மமான முறையில் இறந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து ரஷ்யா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.
புகாரில், எங்கள் விவசாய நிலத்தின் அருகே கல்குவாரி உள்ளது. இதில் பாறைகளை வெடிக்க வைத்த வெடிசப்தம் காரணமாக பசு மாடு அதிா்ச்சியில் இறந்திருக்கலாம்.
எனவே தகுந்த விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்து விசாரிரணை மேற்கொண்டு வருகிறாா்.