செய்திகள் :

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் உடுமலையை அடுத்த அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணையில் போதிய நீா் இருந்ததால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டது.

இதையடுத்து, அணையின் நீா் இருப்பு சரிந்து 50-அடிக்கும் கீழ் குறைந்தது. மே மூன்றாவது வாரம் வரை இதே நிலை தொடா்ந்தது.

இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை அணைக்கு 1,590 கன அடி நீா்வரத்து இருந்தது. இதன்மூலம் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு மேல் உயா்ந்துள்ளது.

அணை நிலவரம்: 90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீா் மட்டம் 51.25 அடியாக உள்ளது. அணைக்கு 1,590 கன அடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து நீா் வெளியேற்றம் இல்லை.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க